
தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதம் தடைச்சட்டம் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்து வழக்கு இன்று(12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதுடன், சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், நீதிமன்றம் வளாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது
No comments: