தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் கொள்கைகளை வகுப்பதற்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஒன்றிணைந்து 9 பேரடங்கிய இணைக்குழுவொன்றினை அமைத்துள்ளன.
கடந்த 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடிய நிலையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூன்று பேரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிலிருந்து ஆறு பேரும் என மொத்தமாக ஒன்பது பேர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் குழுவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் எம். சந்திரகுமார் மற்றும் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கம் ஆகிய ஆறு பேரும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் குழுவுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமை, ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலப் பகுதியில் 2001ஆம் ஆண்டு நான்கு தமிழ்க்கட்சிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அமைக்கப்பட்டிருந்தது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன.
அன்றைய காலப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக திகழ்ந்திருந்தது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக கட்சிகள் வெளியேறுவதும் உள்வாங்கப்படுவதுமான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும், 2020ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளான ரெலோ, புளொட் என்பன இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், கூட்டமைப்பில் அங்கம் வகித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியிருந்தது. அதன் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி வெளியேறியது. இந்த வெளியேற்றங்களையடுத்து கூட்டமைப்புக்குள் புளொட் உள்வாங்கப்பட்டது.
இறுதியில் தமிழரசுக்கட்சி தனித்திருக்க, கூட்டமைப்பிலிருந்து புளொட், ரெலோ என்பன வெளியேறி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஜனநாயக போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி என்பனவும் இணைந்து கொண்டிருந்தன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்பட்டிருந்த போது வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அந்தக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தனர். ஆனால், கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டதையடுத்து நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரவேசமானது வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சிறந்த பாடத்தை கொடுத்திருந்தது. இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியானது பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றிருந்தது.
இந்தக் குழுவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்களான புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் எம். சந்திரகுமார் மற்றும் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கம் ஆகிய ஆறு பேரும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தக் குழுவுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானமும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமை, ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்பெற்றிருந்த காலப் பகுதியில் 2001ஆம் ஆண்டு நான்கு தமிழ்க்கட்சிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது அமைக்கப்பட்டிருந்தது.
இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன.
அன்றைய காலப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக திகழ்ந்திருந்தது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுகள் காரணமாக கட்சிகள் வெளியேறுவதும் உள்வாங்கப்படுவதுமான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும், 2020ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்புடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளான ரெலோ, புளொட் என்பன இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டுக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், கூட்டமைப்பில் அங்கம் வகித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியிருந்தது. அதன் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி வெளியேறியது. இந்த வெளியேற்றங்களையடுத்து கூட்டமைப்புக்குள் புளொட் உள்வாங்கப்பட்டது.
இறுதியில் தமிழரசுக்கட்சி தனித்திருக்க, கூட்டமைப்பிலிருந்து புளொட், ரெலோ என்பன வெளியேறி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஜனநாயக போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி என்பனவும் இணைந்து கொண்டிருந்தன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்பட்டிருந்த போது வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அந்தக் கூட்டமைப்பை ஆதரித்திருந்தனர். ஆனால், கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டதையடுத்து நிலைமை தலைகீழாக மாறியிருந்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரவேசமானது வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு சிறந்த பாடத்தை கொடுத்திருந்தது. இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தியானது பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து 2025ஆம் ஆண்டு முற்பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது தவறை உணர்ந்து ஓரளவுக்கு இணங்கிச் செயற்பட்டமையினால் தேசிய மக்கள் சக்தியை விட ஓரளவுக்கு வாக்குகளை பெறக் கூடிய நிலைமை வடக்கு, கிழக்கில் ஏற்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் பொதுவான விடயங்களிலாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற விடயத்தில் பல்வேறு தரப்பினரும் அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும் அந்த மக்களின் அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால், இதுவரையில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலும், தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்து, பொதுவான திட்டவரைபை தயாரித்து அதன் மூலமாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது மேலோங்கியுள்ளது.
அதனடிப்படையில் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்கு இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க வைப்பதற்கு இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பவற்றின் தலைவர்களை சந்திக்க வைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைகூடியிருக்கவில்லை.
தற்போது, அந்த முயற்சியில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது ஈடுபட்டு வருகின்றது. அண்மையில் தமிழ் சட்டத்தரணிகளின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றின் தலைவர்களிடையே சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் பொது இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் அது குறித்த ஆவணத்தை தயாரிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி தொடரும் நிலையில்தான் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியும் 9 பேரடங்கிய இணைக் குழுவை அமைத்துள்ளன. தமிழ் மக்களின் பொதுவான விடயங்களில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய குழு இரு தரப்புக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க சிறந்த செயற்பாடாகும்.
இத்தகைய பொது இணக்கப்பாடானது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடனும் ஏற்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக இருக்கலாம் அல்லது தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வாக இருக்கலாம் எத்தகைய பொது விடயங்களாயினும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமைகள் தமக்குள் பொது நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியமானதாகும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படலாம். நிலைப்பாடுகள் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் என்று வரும் போது, பொது நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போதைய நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பிலோ அல்லது புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் குறித்தோ அரசாங்கம் அக்கறை காண்பிப்பதாக இல்லை. ஆனாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான அவசியம் குறித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் பொது இணக்கப்பாட்டை எட்ட வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
No comments: