News Just In

2/15/2026 08:31:00 AM

T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? - கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை!

T20 WC 2026: பாகிஸ்தானின் சுழல் ஆயுதம் இந்தியாவிடம் எடுபடுமா? - கொழும்பு நகரில் இன்று பலப்பரீட்சை




 ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் கொழும்பு ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் இன்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, 2009-ம் ஆண்டு சாம்​பிய​னான பாகிஸ்​தானுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்த போட்டி பல்​வேறு கட்ட சிக்​கல்​களுக்கு பின்​னர் நடை​பெற உள்​ளது. பாகிஸ்​தான் அணி முதலில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக விளை​யாட மறுப்பு தெரி​வித்​தது. அந்த அணி வங்​கதேச அணி டி 20 உலகக் கோப்பை தொடரில் நீக்​கப்​பட்​டதற்கு ஆதரவு தெரி​வித்து இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியை புறக்​கணிப்​ப​தாக தெரி​வித்​தது.

இதன் பின்​னர் ஐசிசி, பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​துடன் பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​யது. தொடர்ந்து நட்பு நாடு​களான வங்​கதேசம், இலங்​கை, ஐக்​கிய அரபு அமீரக கிரிக்​கெட் வாரி​யங்​களும் கோரிக்கை வைத்​ததை தொடர்ந்து பாகிஸ்​தான் அணி, இந்​திய அணிக்கு எதி​ரான ஆட்​டத்தை புறக்​கணிக்​கும் முடிவை வாபஸ் பெற்​றது.

இதைத் தொடர்ந்தே இரு அணி​களும் இன்று இலங்​கை​யின் கொழும்பு நகரில் உள்ள பிரேம​தாசா மைதானத்​தில் மோத உள்​ளன. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் நமீபி​யாவை 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் தோற்​கடித்து இருந்​தது.

இந்​திய அணி​யில் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது உறுதி செய்​யப்​பட​வில்​லை. உடல் நலக்​குறைவு காரண​மாக அவர், நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் களமிறங்​க​வில்​லை. ஒரு​வேளை அவர், உடற்​கு​தியை பெற்று களமிறங்​கும் பட்​சத்​தில் சஞ்சு சாம்​சன் வெளியே அமர​வைக்​கப்​படு​வர்.

போட்டி நடை​பெறும் பிரேம​தாசா ஆடு​களம் முற்​றி​லும் சுழற்​பந்து வீச்சுக்கு சாதக​மானது என்​ப​தால் இன்​றைய ஆட்​டத்​தில் இந்​திய அணி கூடு​தலாக ஒரு சுழற்​பந்து வீச்​சாள​ருடன் களமிறங்​கக்​கூடும். இது நிகழ்ந்​தால் அர்​ஷ்தீப் சிங் அல்​லது ரிங்கு சிங் நீக்​கப்​பட்டு அவருக்கு பதிலாக குல்​தீப் யாதவ் சேர்க்​கப்​படக்​கூடும். குல்​தீப் யாதவ், துபா​யில் நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். இது ஒரு​புறம் இருக்க ஆல்​ர​வுண்​டான வாஷிங்​டன் சுந்​தர் முழு உடற்​தகு​தியை எட்டி உள்​ளார்.

இந்​திய அணி​யின் பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் நடப்பு தொடரில் கொத்​தாக விக்​கெட்​களை பறி​கொடுப்​பது வாடிக்​கை​யாகி உள்​ளது. மும்​பை​யில் நடை​பெற்ற அமெரிக்க அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் தொடக்க கட்​டத்​தில் 77 ரன்​களுக்கு 6 விக்​கெட்​களை இந்​திய அணி பறி​கொடுத்​திருந்​தது.

அதேவேளை​யில் நமீபியா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இறு​திக்​கட்ட ஓவர்​களில் இந்​திய அணி 4 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை தாரை வார்த்து இருந்​தது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 200 ரன்​களுக்கு மேல் குவித்​த​தால் விக்​கெட்​கள் சரிவு என்​பது எந்​த​வித பாதிப்​பை​யும் ஏற்​படுத்​த​வில்​லை.

இந்த இரண்டு போட்​டி​யில் மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், டெல்​லி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இஷான் கிஷன், ஹர்​திக் பாண்​டி​யா​வும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவித்​திருந்​தனர். ஆனால் மற்ற பேட்​ஸ்​மேன்​களிடம் இருந்து பெரிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை.

உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்​களில் ஒரு அணி சாதிக்க வேண்​டும் என்​றால் தனிப்​பட்ட வீரர்​களின் திறமையை நம்​பி​யிருப்​பதை விட, கூட்டு முயற்சி தேவை. அதி​லும் பாகிஸ்​தான் போன்ற அணிக்கு எதி​ராக அனைத்து வீரர்​களும் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வது அவசி​யம். சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நெதர்​லாந்து அணி​யை​யும், 2-வது ஆட்​டத்​தில் 32 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அமெரிக்க அணி​யை​யும் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த அணி இரு ஆட்​டங்​களை​யும் இலங்​கை​யிலேயே விளை​யாடி உள்​ளது. சுமார் 2 வாரங்​களாக அந்த அணி அங்​கேயே தங்​கி​யிருப்​பது சாதக​மான விஷய​மாக பார்க்​கப்​படு​கிறது.

ஆடு​களம் சுழலுக்கு சாதக​மாக இருக்​கும் நிலை​யில் பாகிஸ்​தான் அணி​யில் உஸ்​மான் தாரிக், சைம் அயூப், அப்​ரார் அகமது, ஷதப் கான், முகமது நவாஷ் ஆகிய 5 சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். இதில் உஸ்​மான் தாரிக் நீண்ட நிறுத்​தம் செய்து பந்​து​வீசும் பாணி விவாத​மாக மாறி உள்​ளது. இதனால் அவரது பந்​து​வீச்சு இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு புதிய அனுபவ​மாக இருக்​கக்​கூடும்.

பாகிஸ்​தான் அணி​யின் பேட்​டிங்​கில் சாஹிப்​சாதா ஃபர்​ஹான். சல்​மான் அலி ஆகா, சைம் அயூப், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். இதில் சாஹிப்​சாதா ஃபர்​ஹான், கடந்த ஆண்டு நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வின் பந்​து​வீச்​சில் தொடர்ச்​சி​யாக 2 சிக்​ஸர்​களை அடித்து கவனம் ஈர்த்து இருந்​தார்.

எனினும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி இது​வரை வலு​வான பந்​து​வீச்சை எதிர்​கொள்​ள​வில்​லை. அந்த அணி தனது முதல் 2 ஆட்​டங்​களி​லும் நெதர்​லாந்​து, அமெரிக்​காவையே எதிர்​கொண்​டிருந்​தது. இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் பாகிஸ்​தான் அணியின் பேட்​டிங் வரிசைக்கு சவால் கொடுக்​கக்​கூடும்.

இதே​போன்று பாகிஸ்​தான் அணி​யின் சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே ஆகியோர் சிறப்​பாக மட்​டையை சுழற்​றக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதேவேளை​யில் இந்​திய அணியின் டாப் ஆர்​டர் பேட்​டிங் வரிசைக்கு இடது கை வேகப்​பந்து வீச்​சாளர்​களான ஷாகின் ஷா அப்​ரிடி, சல்​மான் மிர்ஸா அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

மே.இ.தீவு​கள் மோதல்: முன்​ன​தாக இன்று காலை 11 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - நேபாளம் அணி​கள் மோதுகின்​றன.

இதைத் தொடர்ந்து பிற்​பகல் 3 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் லீக் ஆட்​டத்​தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அமெரிக்கா - நமீபியா அணிகள் மோதுகின்றன.

மழைக்கு வாய்ப்பு: இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் இன்று கொழும்பு நகரில் மோத உள்​ளன. இந்​நிலை​யில் வங்​காள விரி​கு​டா​வில் உரு​வாகும் குறைந்த காற்​றழுத்த தாழ்வு காரண​மாக கொழும்பு நகரில் மாலை​யில் 70 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்​ள​தாக இலங்கை வானிலை ஆய்​வு மையம்​ அறி​வித்​துள்​ளது.

கை குலுக்கல் இருக்குமா? - கடந்த ஆண்டு நடை​பெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது டாஸ் நிகழ்​வில் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் கேப்​ட​னுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்​னரும் பாகிஸ்​தான் வீரர்​களு​டன் இந்​திய அணி வீரர்​கள் பரஸ்​பரம் கைகுலுக்​கு​வதை தவிர்த்​தனர். இந்த நிலை உலகக் கோப்​பை​யிலும் தொடரக்​கூடும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது.

இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பின் போது இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாத​விடம் கேட்​ட​போது, ‘24 மணி நேரம் பொறுத்​திருங்​கள். ஏன் அதில் இவ்​வளவு கவனம் செலுத்த வேண்​டும். நாங்​கள் கிரிக்​கெட் விளை​யாட வந்​துள்​ளோம். மற்ற விஷ​யங்​களை நாளை பார்த்​துக்​கொள்​வோம்” என்​றார்.

இதுகுறித்து பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா கூறும்​போது, “கிரிக்​கெட்டை ஆத்​மார்த்​த​மாக விளை​யாட வேண்​டும். எனது தனிப்​பட்ட கருத்து ஒரு பொருட்​டல்ல. ஆனால் கிரிக்​கெட் எப்​போதும் எப்​படி விளை​யாடப்பட வேண்​டுமோ அப்​படி விளை​யாடப்பட வேண்​டும். என்ன செய்​வது என்​பதை அவர்​கள்​தான் முடிவு செய்ய வேண்​டும்​” என்​றார்​.

தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டி: டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தி​யா, பாகிஸ்​தான் மோதும் ஆட்​டத்தை டெல்​லி​யிலுள்ள ஓட்​டல்​கள், சினிமா அரங்​கு​கள் நேரடி ஒளிபரப்பு செய்ய தயார் நிலை​யில் உள்​ளன.

டெல்​லி​யில் உள்ள ஓட்​டல்​களில் பெரிய திரைகளைத் தயார் செய்து வாடிக்​கை​யாளர்​கள் பார்ப்​ப​தற்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், சுவை​யான உணவு வகைகளை​யும் ஹோட்​டல்​கள் அறி​முகம் செய்​துள்​ளன. ஹாட்​ரிக், பியர் பவுண்​டரி, சிக்​ஸர் சேவர், பவுண்​டரி பிஞ்ச் என்ற பெயரில் குளிர்​பானங்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளன. டெல்​லி​யில் உள்ள பிவிஆர் சினிமா மல்ட்​டிபிளெக்ஸ் தியேட்​டரில் 300 திரைகளில் போட்​டியைக் காண ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

No comments: