News Just In

1/11/2026 08:09:00 PM

புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக நஸ்லியா பேகம் நியமனம்.

புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக நஸ்லியா பேகம் நியமனம்.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலங்கை கல்வி நிர்வாக சேவையிலுள்ள உலுக்காப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் வடமேல் மாகாணம் - புத்தளம் கல்வி வலயத்தின் புத்தளம் வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிறப்பான ஆசிரிய சேவையின் பின் தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் கல்விப் பணியில் முன்னேறி புத்தளம் வடக்கு கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமைப்பொறுப்பேற்றுள்ள நஸ்லியா இந்த பதவி அடைவின் மூலம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளதாகவும் மேலும் அவர் நல்ல பல சேவைகளை செய்ய பிரார்த்திப்பதாகவும் புத்தளம் வாழ் இடம்பெயர் சமூகம் தெரிவித்துள்ளது

No comments: