அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா! அரசாங்கத்தின் முடிவு
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட நிதி உதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இந்த நிதி உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.
12/03/2025 07:48:00 PM
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: