மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா தலையீடு செய்ய வேண்டும் – தமிழரசுக் கட்சி
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.
அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63மில்லியன் டொலர்கள் நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தகதுறைமுகமாக செயற்படுத்த முடியாதென அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராச ரவிகரன், சண்முகம் குகதாசன், வைத்தியர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதோடு அர்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு நிலையான சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
9/24/2025 09:22:00 AM
மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா தலையீடு செய்ய வேண்டும் – தமிழரசுக் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments: