செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே , அவை தொடர்பிலான விபரங்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதன்கிழமை (3) இரண்டு என்பு கூடுகளின் குறுக்காக காணப்பட்ட என்பு கூடும் , ஒரு என்பு கூட்டின் தோள்பட்டையுடன் தொடுகையுற்றவாறு காணப்பட்ட என்பு கூடும் இன்றைய தினம் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இன்றைய தினம் சட்டை பொத்தான்கள் சிலவும் , காசும் , கைகளில் கட்டும் சிறிய தாயத்து ஒன்றும் புதைகுழியில் இருந்து சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 45 நாட்கள் நீதிமன்றால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை 43 நாட்கள் முடிவடைந்துள்ளன. எதிர்வரும் சனிக்கிழமையுடன் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முடிவுறுத்தப்படவுள்ளது.
அதேவேளை புதைகுழியை அண்டிய பகுதிகளில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகளின் அடிப்படையில் மேலும் புதைகுழிகள் காணப்பட்டலாம் என வலுவாக நம்பப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதி அகழ்வு பணிக்காக தேவைப்படுவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , அதற்கான பாதீடுகளை தயாரித்தல் மற்றும் அதற்கான ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் மாதங்களில் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
9/05/2025 09:00:00 AM
Home
/
Unlabelled
/
செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்
செம்மணி புதைகுழியில் எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் – சுத்திகரிப்பு நடவடிக்கைகள் தொடக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: