News Just In

6/12/2025 06:22:00 PM

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளுக்கு நஷ்ட ஈடு : அமைச்சர் சந்திரசேகரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளுக்கு நஷ்ட ஈடு : அமைச்சர் சந்திரசேகரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு



தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (12) இடம்பெற்ற வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், “தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை தவிர்த்து, அதனை சூழவுள்ள ஏனைய காணிகளை மாவட்ட செயலரிடம் கையளிக்க பணிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலர், பிரதேச செயலர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு காணிகளை கையளிப்பார்.

அதேவேளை தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப்பட்டிருந்தால், அந்த காணி உரிமையாளர்களுக்கு காணியின் பெறுமதி, நஷ்ட ஈடாக வழங்குவது அல்லது மாற்றுக் காணியை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

விகாரை பிரச்சினையை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. அதனை ஒரு மாத காலத்துக்குள் முடிக்க முடிவெடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

No comments: