நூருல் ஹுதா உமர்
நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) நியமனத்தை பெற்றுக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு இணைப்பு செய்யப்பட்ட 26 பேரும் வெள்ளிக்கிழமை (06) தங்களது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
குறித்த ஊழியர்களுக்கான Orientation Programme நேற்று (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. நிருவாகப் பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் உட்பட பிராந்திய பிரிவு தலைவர்கள், நிருவாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) நியமனத்தை பெற்றுக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு இணைப்பு செய்யப்பட்ட 26 பேரும் வெள்ளிக்கிழமை (06) தங்களது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
குறித்த ஊழியர்களுக்கான Orientation Programme நேற்று (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. நிருவாகப் பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் உட்பட பிராந்திய பிரிவு தலைவர்கள், நிருவாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
No comments: