ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தையொட்டி புரவலர் ஹாஷிம் உமர் பவுண்டேசன் அமைப்பினால், நாடளாவிய ரீதியிலுள்ள ஊடக அமைப்புக்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டதற்கமைவாக, இப்போட் மிரர் ஊடக அமைப்புக்கு கிடைக்கப்பெற்ற நிதி உதவியில் இப்போட் மிரர் ஊடக அமைப்பின் அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இப்போட் மிரர் ஊடக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸின் வழிகாட்டலின் கீழ், அதன் முகாமையாளர் எம்.வை.அமீர் தலைமையில் (06) சாய்ந்தமருதில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பிரிவின் பீடாதிபதி போராசிரியர் எம்.எம்.பாசில் பிரதம அதிதியாகவும், உலமாக் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.ஏ.சத்தார் ஆகியோர் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான அங்கிகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், இப்போட் மிரர் ஊடக அமைப்பின் ஸ்பாக உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments: