News Just In

6/21/2025 03:12:00 PM

தீவிரம் அடையும் ஈரான் - இஸ்ரேல் போர் - இலங்கைக்கு உதவும் இந்தியா

தீவிரம் அடையும் ஈரான் - இஸ்ரேல் போர் - இலங்கைக்கு உதவும் இந்தியா



போர் நடவடிக்கை காரணமாக ஈரானில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இந்தியா உதவ முன்வந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ நடவடிக்கை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையர்கள் போன்று நேபாள நாட்டை சேர்ந்த பிரஜைகளையும் ஈரானிலிருந்து வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

'ஆபரேஷன் இண்டஸ்' திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: