ஹட்டனில் பாரிய விபத்து! மூவர் மரணம் - 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஹட்டன் - கண்டி (Hatton - kandy) பிரதான வீதியில் இன்று (21.12.2024) இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 30இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் - கண்டி பிரதான வீதியின் மல்லியப்பு சந்திப்பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது..
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த குறித்த தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் என மொத்தமாக மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாரதியின் கவனமின்மை
விபத்தில் பேருந்து சாரதி உட்பட 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் சிலர் கண்டி மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பேருந்து சாரதியின் கவனமின்மை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12/21/2024 12:47:00 PM
ஹட்டனில் பாரிய விபத்து! மூவர் மரணம் - 30இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: