News Just In

10/25/2024 04:59:00 PM

கிழக்கின் ஓவியத் திருவிழா இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பம்!

கிழக்கின் ஓவியத் திருவிழா இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பம்



கிழக்கு மகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமானது.நாளை மற்றும் நாளை மறுதினமும் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கராசா மலர்ச்செல்வன் உள்ளிட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், கலாசார உத்தியோகத்தர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஓவியக் கண்காட்சியினை சிறப்பித்திருந்தனர்

No comments: