தர்ம வழியில் செல்வதால் இறைவனின் உதவி கிடைக்கும்"
-சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பெளஸி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
"சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலை போனவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.
இதேபோன்று, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் துணிச்சலான முடிவுகளை முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி எடுக்க வேண்டும்.
அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம் புகட்ட மக்களும் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தனமான அரசியலாகும்.
மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், சமூகத் துரோகிகளை தண்டிப்பதற்கு ஒரு போதும் தயங்கப்போவதில்லை.
மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொடுங்கோல் ஆட்சி புரிந்த கோத்தபாயவை பலப்படுத்தவே இருபதாவது திருத்தத்துக்கு வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் 144 எம்.பிக்களை வைத்திருந்த இவருக்கு, சில சட்டங்களைத் திருத்துவதற்கு முடியாமலிருந்தது.
இதனால், கொடுங்கோல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக, எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசினார்.
சமூகத்தின் அமானிதத்தை அடகு வைத்து கோத்தாவிடம் இவர்கள் விலைபோகினர். இவர்களின் ஆதரவால் பலமடைந்ததாலேயே, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோத்தபாய துணிந்தார்.
விலைபோன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் எரிக்கப்பட்டிருந்தால், இந்த வலிகளை உணர்ந்திருப்பர்.
இதனால்தான், சமூக நெறிக்கு உட்பட்டும், நீதிக்குக் கட்டுப்பட்டும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கி எறிந்துள்ளோம்.
சமுதாயத்தை வழி நடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும்.
மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது.
உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது. இதுபோன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.
சஹ்ரான் தலைமையில் பத்து இளைஞர்கள் செய்த தவறுகள்தான், எமது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால், நானுட்பட எனது குடும்பம், சமூக முன்னோடிகளான சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன், மௌலவி ஹஜ்ஜுல் அக்பர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் எமது தாய்மார்கள் சிறை செல்ல நேரிட்டது. இவை, இன்னும் வேதனைகளாகவும், காயங்களாகவுமே உள்ளன. சாய்ந்தமருதிலும் இதன் தாக்கமும் எதிரொலியும் உணரப்பட்டது.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த வலிகள் நீங்கிவிடும். எனவே, எமது தலைமையில் நம்பிக்கை வைத்து சஜீதுக்கு வாக்களியுங்கள்" இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கான இந்த இளைஞர் மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சமூக வாக்குகளால் பதவிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பெளஸி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,
"சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலை போனவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.
இதேபோன்று, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் துணிச்சலான முடிவுகளை முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி எடுக்க வேண்டும்.
அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம் புகட்ட மக்களும் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தனமான அரசியலாகும்.
மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், சமூகத் துரோகிகளை தண்டிப்பதற்கு ஒரு போதும் தயங்கப்போவதில்லை.
மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொடுங்கோல் ஆட்சி புரிந்த கோத்தபாயவை பலப்படுத்தவே இருபதாவது திருத்தத்துக்கு வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் 144 எம்.பிக்களை வைத்திருந்த இவருக்கு, சில சட்டங்களைத் திருத்துவதற்கு முடியாமலிருந்தது.
இதனால், கொடுங்கோல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக, எமது நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசினார்.
சமூகத்தின் அமானிதத்தை அடகு வைத்து கோத்தாவிடம் இவர்கள் விலைபோகினர். இவர்களின் ஆதரவால் பலமடைந்ததாலேயே, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோத்தபாய துணிந்தார்.
விலைபோன முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் எரிக்கப்பட்டிருந்தால், இந்த வலிகளை உணர்ந்திருப்பர்.
இதனால்தான், சமூக நெறிக்கு உட்பட்டும், நீதிக்குக் கட்டுப்பட்டும் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தூக்கி எறிந்துள்ளோம்.
சமுதாயத்தை வழி நடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும்.
மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது.
உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது. இதுபோன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.
சஹ்ரான் தலைமையில் பத்து இளைஞர்கள் செய்த தவறுகள்தான், எமது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கின. இதனால், நானுட்பட எனது குடும்பம், சமூக முன்னோடிகளான சிறந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன், மௌலவி ஹஜ்ஜுல் அக்பர், அப்பாவி இளைஞர்கள் மற்றும் எமது தாய்மார்கள் சிறை செல்ல நேரிட்டது. இவை, இன்னும் வேதனைகளாகவும், காயங்களாகவுமே உள்ளன. சாய்ந்தமருதிலும் இதன் தாக்கமும் எதிரொலியும் உணரப்பட்டது.
சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் இந்த வலிகள் நீங்கிவிடும். எனவே, எமது தலைமையில் நம்பிக்கை வைத்து சஜீதுக்கு வாக்களியுங்கள்" இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திற்கான இந்த இளைஞர் மாநாட்டில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: