News Just In

8/16/2024 04:33:00 PM

கட்சி உட்கட்டமைப்பை பலப்படுத்தும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மட்டக்களப்பு தரவை - 2ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இன்று (2024.08.15ம் திகதி) சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, உச்ச பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளருமான கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.சீ. சமால்டீன் , சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஐ. நளீம், ஐ.எல். நளீம், சம்மாந்துறை மத்திய குழு செயலாளர், எம்.எஸ்.எம். அசாருதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் கட்டமைப்பு, தேர்தல் நடவடிக்கைகள், எதிர்கால கட்சி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

No comments: