News Just In

6/14/2024 02:17:00 PM

மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவு மாணவன் நீரில் மூழ்கி அகால மரணம் !





மருத்துவ துறைக்கு தெரிவான காரைதீவு மாணவன் எஸ்.அக்சயன் இன்று உகந்தை சென்று வரும் வழியில் நீலகிரி ஆற்றிலே நீராடுகையில் நீரில் மூழ்கி அகால மரணமானார். தற்போது பூதவுடல் லாகுகலை வைத்தியசாலையில் உள்ளது

.மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என தெரியவருகின்றது. காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயனும் ஒருவராவார்.

No comments: