
அம்பாறை-வங்களாவடி பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேரூந்துடன் மோதியதில் விபத்தினை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காக பேரூந்தின் சாரதி சுதாகரித்து பேரூந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகிலிருந்த நீர் வாய்க்காலுக்குள் விலகி சரிந்து விபத்துச் சம்பவித்துள்ளது.
காயமரைந்தவர்கள் கல்முனை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments: