News Just In

6/08/2024 07:03:00 PM

மட்டு.வாழைச்சேனை இந்துக் கல்லூரியிலிருந்து 47 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி!




2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்குத் தோற்றி, மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லுரியிலிருந்து 47 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்வதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று  அதிபர் எ.ஜெயக்குமணன் தலைமையில் நடைபெற்றது.

பாண்ட் வாத்தியத்துடன் மாணவர்கள் அழைத்து வரப்பட்டு, கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் அதிபர் உட்பட கல்குடா வலய கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் மாணவர்கள் பாராட்டப்பட்டனர். மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். 47 மாணவர்களில், மருத்துவ பீடத்திற்கு ஒருவரும், 3 பேர் பொறியியல் பீடத்திற்கும் தெரிவாக தகுதிபெற்றுள்ளனர்.

No comments: