News Just In

4/09/2024 11:16:00 AM

வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு!




அபு அலா 

வரலாற்றில் முதல் தடவையாக லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்டத்தின் ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும் நேற்று அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய முன்றலில் இடம்பெற்றது.

லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்ட குழுவின் ஏ.அர்சாத் தலைமையில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் உறுப்பினரும் மக்கள் வங்கி அக்கரைப்பற்று கிளையின் ஓய்வுபெற்ற முகாமையாளருமான இமாமுத்தீன் மெளலானா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.ஹசிப், ஏ.சி.என் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.சி.நியாஸ், பொத்துவில் பிரதேச மக்கள் வங்கிக் கிளையின் வியாபாரம் அபிவிருத்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.நபீல், ஈஸ்ட் லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மது றியாஸ் உள்ளிட்ட லக்கி ஸ்டோர் சந்தி நண்பர்கள் வட்டத்தின் பல்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments: