News Just In

4/01/2024 10:49:00 AM

வைத்தியசாலைகள் சிலவற்றில் இன்று பணிப் புறக்கணிப்பு!




சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் தெரிவு செய்யப்பட்ட 5 வைத்தியசாலைகளான அனுராதபுரம், இரத்தினபுரி, குருநாகல், பதுளை ஆகிய வைத்தியசாலைகளிலேயே இப்பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் தவறினால் நாளை (02) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: