News Just In

4/13/2024 07:08:00 PM

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ! மருதமுனை பிரதான வீதியில் சம்பவம்





அம்பாறை மருதமுனை பிரதான வீதியில் பயணம் செய்த வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

நேற்றையதினம் (12) மாலை கடும் மழை பெய்த சமயம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து நிந்தவூர் பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கார் , மருதமுனை பிரதான வீதியில் திரும்ப எத்தனித்த போது குறித்து வீதியினால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி,பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதால் வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் செயல்படுமாறு பெரியநீலாவனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: