போர் காலத்தில் செய்தியாளராக கடமையாற்றிய சுரேன் கார்த்திகேசு என்பவரால் போரின் சாட்சியம் என்ற நூல் வெளியிடப்படவுள்ளது.
குறித்த நூலானது கனடா வன்கூவர் நகரில் எதிர்வரும் 27ஆம் திகதியும் (27.04.2024) மே 12ஆம் திகதி (12.05.2024) சுவிட்சர்லாந்து நகரிலும் வெளியீடு செய்யப்படவுள்ளது.
இந்த நூலில் நூலாசிரியரின் சாட்சியங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் ஆசிரியரால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் உள்ளடக்கி குறித்த நூலினை எழுதியுள்ளார்.
இதில் இறுதிப்போர் காலத்தில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் போரின் மூலம் இடம்பெற்ற இன அழிப்பு சாட்சியங்களையும் கொண்டதாக இந்த நூல் அமையப்பெற்றுள்ளது.
No comments: