News Just In

3/25/2024 08:07:00 PM

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்! ஒருவரது நிலை கவலைக்கிடம்




வாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10.30. மணியளவில் ஓட்டமாவடி – மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துடன், பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: