News Just In

3/28/2024 08:48:00 PM

முல்லைத்தீவு சென்ற பிள்ளையான்!




முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு இன்று(28) வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்.

இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன் வரையான வீதியை புனரமைத்து தருவதாக வும் பிள்ளையான் மக்களிடம் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சு பதவியினை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக சிவநேசதுரை சந்திரகாந்தன், முல்லைத்தீவுக்கு இன்று(28) விஜயம் மேற்கொண்டார். இதன்போது, முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை கிராமத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தியின் கீழ் இரட்டைவாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதியினை புனரமைத்து தருவதாகவும் மக்கள் மத்தியில் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் , இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

No comments: