News Just In

2/15/2024 11:07:00 AM

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!





யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாதமையே இப் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: