![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiawbjHCYbszioFtwJrc2g3k_Z-aalNgvOChxvLm93Z3SiAwNNTJLyciTWfAZ4Q-86Jjl0FfMPDQkb3KNdXpl576SGIHGzlJWOBdkCBuSDbualsTsiNEvnT9r_5oAS_rYRZ_ynv3b_-wOOhyQPjUIbCC_AZuIXYcbbpQaU-uu_cNosQstsZ5NOXLSz4FyyU/w640-h360/Downloads16.jpg)
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொழில் தேடுகின்ற இளைஞர், யுவதிகள் தொழில் முயற்சியாண்மை செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிழக்கு நட்புறவு ஒன்றிய மற்றும் Softa Care நிறுவனத்தின் அனுசரனையில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் Softa Care நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும், கிழக்கு நட்புறவு ஒன்றிய தவிசாளருமான பொறியியலாளர் எம்.எம்.நசீர், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், கிழக்கு நட்புறவு ஒன்றிய பிரதி தவிசாளர் எம்.எம். ஜுனைதீன், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.சி. முஹம்மட், ஓய்வு பெற்ற பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலி, மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தால்சுறூன், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஷமீலுல் இலாஹி உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments: