சாணக்கியன் என்கின்ற நபர் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் கதாநாயகனாக மாறிக்கொண்டிருக்கின்றார், சாணக்கியன் பிரித்தெடுத்த ஈழமா கிழக்கு மாகாணம் என சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.
இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய விடயத்தை எமது இந்நாட்டிலுள்ள 200க்கும் அதிகமான முதுகெலும்பு அற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டிருந்த நிலையிலும் ஒருவர் கூட நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை என அவர் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக மாதவனை மயிலத்தமடு பகுதியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி எழுப்பி இருந்தார் இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவரது முகநூல் பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments: