News Just In

9/30/2023 09:05:00 AM

லண்டன் மாப்பிள்ளையை உதறித்தள்ளிய பெண் மருத்துவர்; வெளியான அதிர்ச்சி காரணம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் அவரை பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் பிரிவுக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31வயதான இளைஞனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.

மணப்பெண்ணும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன் , அவரும் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தென்னிலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இருவருக்கும் அண்மையில் வெகு விமரிசையாக திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது பெண்மருத்துவர் லண்டன் இஞ்சினியர் தனக்கு வேண்டாம் என கூறி பிரிந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்நிலையில் பிரிந்து நிற்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு துாது சென்ற தரப்பிடமே குறித்த பெண் வைத்தியர் தனது ஆவேசங்களை கொட்டித் தீர்த்துள்ளாராம்.

அதாவது இஞ்சினியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாததால் கணவரிடம் இருந்து பிரிய மருத்துவர் முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்ட பலரும் இருவரும் நல்ல ஜோடிப்பொருத்தம் என ஆச்சரியப்பட்டதாகவும், இருவரது புகைப்படங்களும் திருமண நிகழ்வை புகைப்படம் எடுத்த நிறுவனத்தால் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

No comments: