News Just In

5/19/2023 07:29:00 PM

உயிரின் பாதியை இழந்து அழுது ஆற்பரித்தேன்! தளபதி சொர்ணத்தின் மகள் ஆதங்கம்!





எமது தாயகத்தின் இருப்பையும் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிபடுத்தி இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை என தளபதி சொர்ணத்தின் மகள் முகிலினி தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், இலங்கை அரசின் இன அழிப்பின் நிகழ்ச்சி நிரலில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு பற்றி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முகிலினி,“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்று தமிழீழ தேசிய தலைவர் கூறியுள்ளார்.


சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், இதே நேரத்தில் உயிரில் பாதியை இழந்து அழுது ஆற்பரித்து அடங்க முடியாமல் தவித்து கொண்டிருந்த சிறுமி.

இன்று இந்த பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு பெண்ணாகி எமது மக்களின் உரிமையின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பதை நினைத்து பெருமைபடுவதா? இல்லை இத்தனை காலமாக செயலாற்ற முடியாதவர்களாக நாங்கள் இருப்பதை எண்ணி தலை குனிவதா?”என தெரிவித்துள்ளார்.

No comments: