News Just In

5/10/2023 02:10:00 PM

நல்லிணக்கதைக் கட்டியெழுப்புவதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு!




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணி வருவதற்காக தேசிய சமாதானப் பேரவை அமுல்படுத்தும் மாவட்ட சர்வமதப் பேரவையின் செயற்பாடுகளை எதிர்வரும் ஆண்டும் செயற்படுத்துவதற்கான திட்ட முன் மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் புதன்கிழமை 10.05.2023 இடம்பெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவுக் கட்டிடத் தொகுதியின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை 10.05.2023 இடம்பெற்ற இந்த செயலமர்வில் ஹிந்து இஸ்லாமிய கிறிஸ்தவ பௌத்த சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் சமாதான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்கள் பற்றிய கரிசனைகள் முன்வைக்கப்பட்டன.

சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு வாழும் எதிர்கால இளம் சமூகத்தை உருவாக்குவதோடு சமாதானத்தைச் சீர் குலைக்கும் எந்த நடவடிக்கையையும் முன் கூட்டியே அறிந்து அவை வன்முறை நிலைமாற்றத்திற்கான பன்முக நடவடிக்கைகள் செயல் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதாக இணைப்பாளர் மனோகரன் தெரிவித்தார்


No comments: