News Just In

5/19/2023 01:47:00 PM

மாணவனின் காதில் அறைந் ஆசிரியர் பாணமையில் கைது!




அம்பாறை, பாணமை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஐந்து வயது மாணவனின் காதுப் பகுதியில் அறைந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் வகுப்பு ஆசிரியர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: