News Just In

2/15/2023 05:57:00 PM

வீதியை விட்டு விலகிய பேருந்து; உயிரை காப்பாற்ற குதித்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞர் உயிர் தப்ப வெளியே பாய்ந்த போது பஸ் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் எம்பிலிபிட்டிய – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 17 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் விபத்துக்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: