News Just In

2/22/2023 01:54:00 AM

பிள்ளையானின் முக்கிய அமைப்பாளர் தமிழரசு கட்சியில் இணைவு!



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர ஆதரவாளர்ககள் பலர் தமிழ் தேசியத்தின்பால் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் அமைப்பாாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பிள்ளையானின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட இவர்,தற்போது சாணக்கியனுடன் இணைந்து வீட்டு சின்னத்திற்கு ஆதரவளிக்குமாறு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கட்சியை விட்டு வெளியேறிய விசுவாசிகள்

மேலும் கூறுகையில்,“கிழக்கை மீட்போம் தனி யுகம் படைப்போம் என பல கோரிக்கைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இன்று நிற்கதியாகியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிதீவிர விசுவாசிகளாக இருந்த பலர் இன்று கட்சி தலைமையின் நடவடிக்கை காரணமாக கட்சியை விட்டு ஒதுங்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழர் கட்சிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சில ஆதரவாளர்களின் அடிமட்டத்தனமான கீழ்த்தரமான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளை ஆதரித்த அதிதீவிர விசுவாசிகள் இன்று கட்சியை விட்டு வெளியேறி தமிழ் தேசியத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளனர்.

கடந்த காலங்களில் பல மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டவர்கள் இன்று அவருடைய சில ஆதரவாளர்களின் அடிமட்டத்தனத்தினால் தங்களது குடும்பங்களும் கொலை கொள்ளை கடத்தல் போன்ற விடயங்களில் உட்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் படகை விட்டு வெளியேறி தேசியத்துடன் நிற்கின்றனர்.

சிறைச்சாலையில் இருந்த பிள்ளையானவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தங்களது வேலைகளையும் துச்சமாக மதிச்சு பிள்ளையானுக்காக பாடுபட்டவர்கள் இன்று பிள்ளையானின் உண்மை முகம் தெரிந்தவுடன் தேசியத்துக்குள் உள்நுலைந்துளார்.

அபிவிருத்தி என்னும் மாயையை காட்டி வாகரையில் செருப்பால் அடித்து திரத்தப்பட்ட பிள்ளையானின் கோட்டை இன்று தமிழ் தேசியத்துடன் நிற்கின்றது.பிள்ளையானின் போலி தேசியமும் போலி அரசியலும் அவரின் ஒட்டு குழுக்களின் அட்டகாசமும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

கருத்து சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்கள் ஊடகவியலாளர்களுக்கும் அவ கீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்துடன் சேர்ந்து பல முன் நகர்வுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும் அவைகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கின்றது .

ஆகவே அபிவிருத்தி என்னும் மாயையில் பிள்ளையான் செய்த கொலைகள் பிள்ளையான் செய்த கொடூரங்கள் பிள்ளையானால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் பிள்ளையானின் செயலாளர்கள் ஐநா சபையில் தெரிவித்த வாக்குமூலங்கள் இவை எல்லாமே ஒரு சான்றாக இன்று மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றது.

அடிமட்டத்தனமான விமர்சனங்களை முன் வைக்கும் பிள்ளையானின் அறிவிருடிகளின் செயற்பாடு இன்று அவரின் தோல்விக்கு காரணமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

தனக்கு எதிராக ஒரு செய்தி வருவதாக இருந்தால் அந்த ஊடகவியலாளரையும் ஊடகவியலாளர் குடும்பத்தையும் கேவலப்படுத்தும் நடவடிக்கை பிள்ளையானுக்கு அது ஒரு கைவந்த கலையாக இருந்திருக்கின்றது.

பல ஊடகவியலாளர்களை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டும் இவர் மீது வைக்கப்பட்டிருக்கின்றது.
இப்படியான ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் இன்று மக்கள் தெளிவுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.”என கூறியுள்ளார்.

No comments: