News Just In

2/21/2023 07:53:00 AM

இலங்கையை விட்டு வெளியேறும் பிரபல வெளிநாடு நிறுவனங்கள்!

இலங்கையில் உள்ள ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி (Mitsubishi) நிறுவனங்கள் தமது அலுவலகங்களை மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

இலங்கையில் உள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் அலுவலகம் எதிர்வரும் மார்ச் மாதம் மூடப்படவுள்ளதுடன், தாய்சே நிறுவனத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அயல் நாடுகளின் பிரதிநிதிகளால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No comments: