இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று (20.01.2023) வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் இக்கட்டான காலங்களில் உதவிய இந்திய அரசாங்கத்திற்கு மகிந்த இதன்போது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: