News Just In

12/28/2022 07:46:00 AM

பஸ்ஸில் யாழ்ப்பாண இளைஞனுக்கு காதல் அழைப்பு விட்ட கொழும்பு பெண்! பின்பு நடந்த சுவாரஸ்யம்!

கொழும்பில் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த யாழ்ப்பாண இளைஞனுக்கு அதே பஸ்ஸில் பயணித்த கொழும்பு பெண் ஒருவர் காதல் அழைப்பு விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பு செல்வதற்கு 101 எனும் இலக்கத்தினுடைய பஸ்ஸில் எறியுள்ளார்.

ஏறியவுடன் இரு இருக்கையுள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். அவ் இருக்கைக்கு அருகில் ஒரு இளம் பெண் ஒருவர் இருந்துள்ளார்.

பஸ் பம்பலப்பிட்டியினை தாண்டி வரும் வரை இருவரும் சாதாரணமாக பேசி வந்துள்ளனர்.

பேசிக் கொண்டிருக்கும் போது இளம் பெண் தன்னிடம் இருந்த பேப்பரில் நான் உங்களை காதலிக்க விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதமா என்று ஆங்கில வரியில் எழுதி அந்த இளைஞனுக்கு காட்டியுள்ளார்.

இதனை பார்த்த இளைஞன் வியப்பில் அந்த பெண்ணை திரும்பி பார்த்த படி அந்த பேப்பரினை எடுத்து நான் முரட்டு சிங்கிள் என்றும் உங்களை போல் திடீரென வரும் காதல் உண்மையான ஒரு காதல் அல்ல என்றும் குறிப்பிட்டு அந்த இளைஞன் இடையிலே இறங்கி சென்றுள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்பாணத்தினை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

No comments: