News Just In

11/10/2022 06:59:00 PM

யாழில் பரபரப்பு; இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல்!

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் நேற்று இரவு 9 மணி அளவில் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ் இந்திய துணை தூதுவரினால் யாழ்.பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதனையடுத்து தற்பொழுது யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments: