--ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திற்கும், எழுவான்கரை பிரதேசத்திற்கும் இடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக அமைவது மட்டக்களப்பு வாவியை ஊடறுத்துச் செற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் ஓடத்துறைப் படகுப்பாதையாகும்.
இப்போக்குவரத்து மார்க்கத்தினூடாக விவசாயிகள், ஆசிரியர்கள், அரச, மற்றும் அரச சார்பற்ற, ஊழியர்கள், வியாபாரிகள் பொது மக்கள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர்.
இப்படகுப்பாதை தற்போதைய நிலையில் மிகவும், பழுதடைந்த நிலையில் சேவையிலீடுபடுவதனால் அதில் பயணம் செய்யும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிப்பதாக அங்கலாய்க்கின்றனர்.
இப்படகுப்பாதையில் தூவரங்கள் காணப்படுவதோடு, துருப்பிடித்து நிலையில் உள்ள படகுப் பதையை புனரமைத்து நவீன முறைப்படுத்தி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்கு உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments: