News Just In

10/14/2022 07:26:00 PM

நாளை கல்முனை எக்டோ (ECDO) நூலகத்தில் இடம்பெறவுள்ள இரத்ததான முகாம்!

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனை கல்வி, கலாச்சார மேம்பாட்டு தாபனம் (ECDO நூலகம்) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது நாளை (15/10/2022) சனிக்கிழமை 452B பள்ளி ஒழுங்கை, கல்முனை -09 யில் அமைந்துள்ள ECDO நூலகத்தில் காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது.

மனித உயிர் காக்கும் இரத்தான முகாமில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முன்வருமாறு அனைவரையும் ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்

குறிப்பு: போக்குவரத்து சிரமமுள்ளவர்களுக்கு போக்குவரத்திற்கான வசதிகள் ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு, ஏற்பாட்டு குழு,ECDO நூலகம், 452B பள்ளி ஒழுங்கை, கல்முனை -09.

தொலை பேசி இலக்கம் 0672225577, 0777073995 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

No comments: