News Just In

10/15/2022 07:49:00 AM

வாழைச்சேனை ஆயிஷா ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர்களை ஊர்வலமாக அழைத்து கௌரவித்த நிகழ்வு நேற்றுமுன்தினம்  (13) இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா கலந்து கொண்டார்.

அத்துடன், ஏனைய அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் யூ.அஹமட், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.பஸீல், உறுப்பினர்களான ஏ.எம்.நியாஸ், எம்.எம்.அன்வர் சாதாத், எம்.எப்.பனூஸ், எஸ்.எச்.இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஆசிரியர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: