News Just In

10/13/2022 02:12:00 PM

கோட்டாபய பதவியேற்றவுடன் எடுத்த முதல் நடவடிக்கை! அச்சிடப்பட்ட பெருந்தொகை பணம்!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் பாரிய நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கி , அதற்கு பதிலாக பெருந்தொகை பணத்தை அச்சிட நடவடிக்கை எடுத்தார். இந்த தீர்மானமே எமது வீழ்ச்சிக்கான அடிப்படை காரணியாக அமைந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவை மக்களின் கழுத்தை நெரிக்கும் வகையில் அமையக் கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலுள்ள விடயங்களே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

No comments: