இலங்கையில் உள்ள அலுவலகம் ஒன்றில் பாதுகாவலராக பத்மநாத் என்பவர் கடமையாற்றி வருகின்றார்.
நல் உள்ளம் மற்றும் நற்பண்பு உடையவர். ஏழ்மையில் வாழும் இவர், சில நாட்களில் பட்டினியாக இருந்ததும் உண்டு.
இந்த நிலையில், சம்பவ தினத்தன்று அவருக்கு கிடைத்த உணவை அவர் காகங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பதை குறித்த அலுவலகத்தின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அப்போது அவரிடம் நீங்கள் உண்ணவில்லையா என அலுவலகத்தின் உரிமையாளர் வினவியுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் அவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கண் கலங்கிய பத்மநாத, '' ஐயா நானும் ஒரு பௌத்தர். எனது தாய் இறந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. அவரை நினைத்து அன்னதானம் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் தான் அவரை நினைத்து இந்த வாயில்லா ஜீவன்களுக்கு எனது உணவை வழங்கினேன்" என்றார்.
அப்போது தான் ஒரு விடயம் எனக்கு புரிந்தது. இது போன்ற பல பேர் நம் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
மனிதம் அற்று பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு மத்தியில், தாயின் திதியன்று இருப்பதை கொடுத்து தன் கடமையை செய்த இந்த மகனை கண்டு பூரிப்படைந்தேன். என அவலுகத்தின் உரிமையாளர் தெரிவித்து இந்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
No comments: