News Just In

7/21/2022 06:56:00 AM

முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உட்சவ பெருவிழா எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த வருடாந்த திருச்சடங்கு உட்சவ பெருவிழாவானது எதிர்வரும் ஆடி மாதம் 27ஆம் திகதி திருக்கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகி ஆவணி மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தீ மிதிக்கும் நிகழ்வுடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

ஆகவே பக்த அடியார்கள் ஆலய திருவிழா கால விசேட பூசைகளில் கலந்துகொண்டு அம்மனின் திருவருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.

No comments: