News Just In

7/20/2022 07:07:00 PM

திடீரென வீதிக்கு இறங்கி மக்களை ஆச்சர்யப்படுத்திய இலங்கையின் புதிய ஜனாதிபதி!

நாடாளுமன்ற அமர்வு நிறைவடைந்து வெளியேறும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திடீரென தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடி படையினர் அருகில் ஜனாதிபதி சென்றமையால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் ரணில் விசேட அதிரடிப்படையினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காகவே இறங்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமே இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விசேட வாக்கெடுப்பின் போது 134 வாக்குகளை பெற்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: