News Just In

7/20/2022 03:18:00 PM

பொதுத் தேர்தலொன்றுக்கு உடனடியாக செல்ல வேண்டும்- அநுர!




நாட்டில் மிக விரைவாக பொதுத் தேர்தலொன்றை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


வாக்கெடுப்புக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் பிரதமராகவும், எதிர்க்கால அரசியல் ஆசையில்லாத ஒருவரை நியமிக்குமாறுக் கோரினோம்.

இதன்போது பிரதமர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம், இந்த இரண்டு பதவிகளுக்கும் பெண்கள் இருவரை நியமிக்குமாறுக் கோரியிருந்தார்.

அவ்வாறு ஒரு அரசாங்கம் அமையுமானால் நாம் அரசாங்கத்துடன் இணைந்து, அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளத் தயாராகவே உள்ளோம் என நாம் அறிவித்திருந்தோம்.

இன்று நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு உறம் இல்லை. மீனவர்கள் படகை எடுத்து கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். குழந்தைகளுக்கு பால் மா இல்லை.

இவ்வாறான நிலையில், உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என்றும் நாம் தெரிவித்திருந்தோம்.

ஏனெனில், தற்போதுள்ள இந்த நாடாளுமன்றமானது மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். இவர்களால் நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய எந்தவொரு தகுதியும் கிடையாது.

எனவே, மிக விரைவாக தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். என்றார்.

No comments: