News Just In

7/22/2022 06:11:00 AM

கொழும்பில் வெடித்த பதற்றம்! இரவோடு இரவாக “கோட்டா கோ கம” தகர்ப்பு ! செயற்பாட்டாளர்கள் கைது!

இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கோட்டா கோ கம பகுதிக்கு தற்போது காவல்துறை உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் துப்பரவுப் பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு எஞ்சியிருக்கும் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: