News Just In

7/21/2022 06:58:00 PM

மட்டக்களப்பில் 17 எரிபொருள் நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய ஏற்பாடுகளுக்கமைய இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 10 எரிபொருள் நிலையங்களில் பெட்றோல்ரோல், டீசல் எரிபொருள்  வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது

இதுதவிர நெல் அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிககளுக்குத் தேவையான எரிபொருட்களை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபை சாலைகளிலும் எரிபொருள் தற்பொழுது வழங்கப்பட்டு வருவதாகவும் நாளயதினமும் இவ்வகையான ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ;- நீண்ட காலமாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு எதிர்நோக்கிய மாவட்ட மக்களுக்கு ஓரளவு நிவாரணம் இதன் மூலம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது அந்த அளவில் கணிசமான அளவு எரிபொருள் வினியோகிக்கப்பட்டு வருகிறது இதன்படி 15 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிலையங் களிலும் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாகவும் இந்த எரிபொருள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது

கொழும்பு மாநகர சபை அறிமுகப்படுத்தியுள்ள பாஸ் நடைமுறைக்கமைய வாகனங்களின் இலக்கத்தகடு அடிப்படையில் இன்று இந்த எரிபொருள் வழங்கும் திட்டம் அமுல் நடத்தப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் இந்த விநியோகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)





No comments: