கோதுமை மாவு ஏற்றிவந்த லொரி ஒன்று விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் வைத்தே இந்த விபத்துச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி கோதுமை மாவு ஏற்றிச் செல்லும் போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு விபத்துக்குள்ளான லொரியில் பயணம் செய்த சாரதியும் நடத்துனரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
No comments: