News Just In

7/24/2022 11:14:00 AM

தனது அடுத்தகட்ட நகர்வுகளை ஆரம்பித்தார் ரணில்! வழமைக்கு திரும்பவுள்ள சேவைகள்!

தற்போதைக்கு முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் சிறிலங்காவின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என்று அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்கள் வழமை போன்று இயங்கும் நிலையை உருவாக்கவும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்துச் செயற்படவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிவில் நிர்வாகத்தை பலப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கவும் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments: