News Just In

7/19/2022 03:19:00 PM

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் : நீதிமன்றத்தின் கட்டளையை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் : பொலிஸார் நகர்தல் பத்திரம் தாக்கல்





முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் 14 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.


ஆனால் தற்போது குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில் சிக்கல் நிலை இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் தென்பகுதியில் கொந்தளிப்பு நிலை தோன்றியுள்ளதாகவும் இந்த கட்டளையை நடைமுறை படுத்தினால் இனங்களுக்குள்ளே பிணக்குகள் ஏற்படலாம் என தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் 18 ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜென்ரல் மற்றும் பிரதிநிதிகள் நீதிமன்றில் இந்த வழக்குவிசாரணைக்காக முன்னிலையாகியுள்ளனர்.






No comments: